×
 

பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகர் சுந்தர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு சகோதரர் பி.ஆர். சுந்தரைக் கைதுசெய்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் சகோதரர் பி.ஆர்.சுந்தர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அரசியல் பழிவாங்கல் நோக்கோடு வழக்குத் தொடுத்து, கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு மிக மோசமான நிர்வாக நடவடிக்கை என தெரிவித்தார்.

உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க சீமான் வலியுறுத்தி இருக்கிறார். தனிநபர் பகை தீர்க்க, மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முதல்வர் விஜய்யின் போக்கு வெளிப்படையான அதிகார முறைகேடு என தெரிவித்தார். 

அரசையோ, அரசியல் இயக்கத்தையோ விமர்சித்துப் பேசுவதற்கு அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை என்பது மிக மிக அடிப்படையான ஜனநாயக உரிமை என்றும் கூறினார். அந்த அடிப்படை உரிமையையே முற்றாக மறுக்கும் வகையில், அதிகாரத்தைக் கொண்டு வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான அதிகார முறைகேட்டினை கடுமையாக எதிர்ப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: தாம்பரம் அருகே 156 கிலோ கஞ்சா பறிமுதல்! ஒடிசாவில் இருந்து கடத்திய 3 பேர் கைது!

ஆகவே, பி.ஆர். சுந்தர் மீது உண்மைக்குப் புறம்பாகத் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share