×
 

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை..! உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை என உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை, அதாவது ஏப்ரல் 23 அன்று, சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற்று, அதன் முடிவுகள் அதே நாளில் அறிவிக்கப்படும். தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்து விட்டது. தமிழகத்திலிருந்து வெளிஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "திரு வி க நகர் தொகுதியில் குண்டர்கள்"..! திமுக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு..!!

பொதுமக்கள் அச்சமின்றி வழக்கமான நியாயமான கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம் என கூறியுள்ளது. சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஆய்வு செய்து பணம் திருப்பி தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் செல்ல ஆம்னி பேருந்து பயண கட்டணம் குறித்து www.aoboa.co.in என்ற எண்ணில் என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை தொடர்பான புகார் கொடுக்க என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share