"என்னையும் என் தாயையும் இழிவாக பேசினார்கள்... ஆனாலும் மன்னிக்கிறேன்!" – பிரதமர் மோடி உருக்கம்!
''டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது என்னை பற்றியும், என் தாய் பற்றியும் அவதுாறாக பேசிய மாணவர்களை மன்னிக்க விரும்புகிறேன் பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும் தனது தாயையும் அவதூறாக பேசியதாக கூறப்படும் மாணவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என்றும், அவர்களை மன்னித்து நல்ல பாதைக்கு வழிநடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது தாயை குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட சிலர் மீது புகார் அளிக்கப்பட்டது. முதலில் நொய்டா போலீசில் பதிவு செய்யப்பட்ட இந்த புகார், பின்னர் டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!
Abuses never solve anything.
— Narendra Modi (@narendramodi) July 31, 2026
Let’s guide the misguided.
Let’s work together.
Let’s work for Bharat. pic.twitter.com/yAePG60KYL
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஜந்தர் மந்தரில் நடந்த சம்பவத்தை உலகமே பார்த்ததாக குறிப்பிட்ட அவர், சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் சில இளைஞர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
இளமைப் பருவத்தில் தவறுகள் நிகழ்வது இயல்பான ஒன்று என்றும், அதே வயதில்தான் அந்த தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறினார். இளைஞர்களை நீதிமன்ற வழக்குகளில் சிக்கவைத்து தண்டிப்பதை விட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கி சமூகத்திற்கு நல்ல குடிமக்களாக உருவாக்குவது முக்கியம் என பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை தாம் தனிப்பட்ட முறையில் மன்னிக்க விரும்புவதாகவும், வழிதவறிச் சென்ற இளைஞர்களை நல்ல பாதைக்கு திருப்புவது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை பெருந்தன்மையான அணுகுமுறையாக வரவேற்க, மற்றவர்கள் இதுகுறித்து தங்களது அரசியல் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மேற்காசியாவில் போர் பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் பற்றாக்குறை? மோடி அவசர ஆலோசனை!