இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அபுதாபி: பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று (மே 15) டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அபுதாபியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் பிரதமர் மோடி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். “நான் எனது இரண்டாவது வீட்டிற்கு வந்துள்ளேன். இந்த உணர்வு என் வாழ்வின் மிகப்பெரிய மூலதனம்” என்று கூறிய அவர், “இன்று உங்கள் விமானப்படை விமானங்கள் வான்வழியில் எனக்கு பாதுகாப்பு அளித்தன. இது இந்திய மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் கௌரவம்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!
#WATCH | Abu Dhabi, UAE: In his delegation-level talks with UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan, PM Narendra Modi says, "I express heartfelt gratitude to you for the warm welcome. Just like you said - I have come to my second home. This sentiment is a huge capital… pic.twitter.com/PWCNIqO2pq
— ANI (@ANI) May 15, 2026
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அளித்த அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்த வளைகுடா பயணம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக விளங்குகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து வலுவான உறவைப் பேணி வரும் நிலையில், புதிய ஒப்பந்தங்கள் இரு நாட்டு மக்களின் நலனுக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மேற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என வெளியுறவு வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அடுத்தக்கட்ட பயணங்களும் முக்கிய ஒப்பந்தங்களுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!