காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? அப்படி ஒரு சம்பவமே நடக்கல..! காவல்துறை விளக்கம்..!!
காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கொடுத்த புகார் பொய் என காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து வெளியாகும் பாலியல் குற்றங்களில் இதுவும் முக்கியத்துவம் பெற்றது. அடையாறு C.L.R.I.க்கு ப்ராஜெக்ட் தொடர்பாக மாணவி ஒருவர் சென்றுள்ளார். தற்போது அந்த மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக கூறப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் வெளியான இந்த அடுத்த பாலியல் வன்கொடுமை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
திருச்சியிலிருந்து ப்ராஜெக்டுக்காக சென்னை வந்திருந்த மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்தாக கூறப்பட்டது. காரில் கடத்திச் சென்று மூன்று பேர் தன்னை மிரட்டியதாக அபிராமிபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பின் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இது பொய் புகார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!
மார்ஃபிங் செய்த புகைப்படத்தை காண்பித்து வற்புறுத்தி காரில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த மாணவி இவ்வாறு பொய் புகார் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளஸ் டூ மாணவி கொடூர கொலை... அவ்வளவும் அலட்சியம்..! இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!!