இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டிருக்கிறது.
மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வாசனைத் திரவியங்கள் மற்றும் பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து கலசாபிஷேகமும் நடைபெற்றது. மூலவருக்கு சங்க கவசம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரமான கற்பக விருட்ச விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனிநபர் அர்ச்சனை மற்றும் விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், மணக்குள விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கற்பக விருட்ச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!
அதேபோல, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 16,000 லட்டுகள் வழங்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறப்பு தரிசனத்திற்காக இன்று ஒரு நாள் மட்டும் விஐபி நுழைவுச் சீட்டு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் எந்த ஒரு விசேஷங்கள் செய்யப்பட்டாலும், எந்த ஒரு காரியங்கள் நடைபெற்றாலும், மணக்குள விநாயகர் கோயிலில் முதலில் தரிசனம் செய்துவிட்டுத்தான் அதன் பிறகு பொதுமக்களும் பக்தர்களும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்வார்கள்.
அதேபோல, இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலில் மணக்குள விநாயகரை தரிசனம் செய்துவிட்டுத்தான், அதன் பிறகு தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும், தங்கள் வீடுகளுக்கும் தேவையான விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகருக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் பொதுமக்கள் வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.
இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். மணக்குள விநாயகர் கோயிலில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க: கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!