விஜய் போட்ட போடு... தனியார் பார்களில் இனி இது நடக்கவே கூடாது... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விக்னேஷ் தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்ட அளவிலான அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த ஆய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விக்னேஷ் தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆயத்தீர்வைத் துறை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய உத்தரவுகளை அமைச்சர் பிறப்பித்தார்.
இதையும் படிங்க: 10 மணிக்கு மேல டாஸ்மாக் திறந்திருந்தால் போலீஸ் மீது நடவடிக்கை! எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் வார்னிங்!
குறிப்பாக, எல்-2 விதிமுறைகளின் கீழ் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் முறையாக இயங்குகிறதா என்பதை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக களப்பணியாளர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாவட்ட மேற்பார்வை அலுவலர்கள் மதுபான ஆலைகள் விதிமுறைகளின்படி இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் ஆய்வு கூட்டத்தில் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING போட்டுறா வெடிய... டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட்நியூஸ்... விடிந்ததுமே அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்...!