×
 

அரசு பேருந்தில் தீண்டாமை கொடுமையா?... புதுக்கோட்டையில் நரிக்குறவர் இன மாணவிகளுக்கு நடந்தது என்ன?

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தின் தானியங்கி கதவு திடீரென திறந்ததால் பள்ளி மாணவிகள் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த விவகாரத்தில் தீண்டாமை கொடுமை நடந்ததாக குற்றச்சாட்டு

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசு பேருந்தின் தானியங்கி கதவு திடீரென திறக்கப்பட்டதால், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தவறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ரங்கம்மா சத்திரத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்தில் சென்று வருகின்றனர்.

நேற்று காலை கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற 8-ஆம் எண் அரசு பேருந்தில் அவர்கள் ஏறியுள்ளனர். அப்போது, பேருந்தில் இருந்த சக பயணிகள் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பேருந்தில் பயணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

இந்த நிலையில், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தானியங்கி கதவு திடீரென திறக்கப்பட்டதால், படிக்கட்டு அருகே நின்றிருந்த 10 மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக சாலையில் விழுந்தனர்.

மாணவிகள் கீழே விழுந்ததைக் கூட கண்டுகொள்ளாமல், ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 9 பள்ளி மாணவிகளும், ஒரு கல்லூரி மாணவியும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,  “பஸ்ஸில் ஏறும்போது ஏறிவிட்டோம். பஸ் கதவை மூடிவிட்டார்கள். கதவு மூடிவிட்டு திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். ஏதோ பட்டென்று தோன்றியது. கையில் வலி ஏற்பட்டு அப்படியே விழுந்துவிட்டேன். கையிலும் அடிபட்டது, தலையிலும் அடிபட்டது. வழக்கமாக மினி பஸ்ஸில் தான் செல்வோம். மினி பஸ் வரவில்லை. ஒரு வாரமாக மினி பஸ் வராததால் 8-ஆம் எண் பேருந்தில் சென்றோம். அதனால்தான் இந்தப் பேருந்தில் சென்றோம்.” என்றார். 

ரங்கம்மா சத்திரம் வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை அலட்சியப்படுத்துவதாகவும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளும் மாணவிகளிடம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இது தொடர்ச்சியாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான் சார். கீரனூரிலிருந்து புதுக்கோட்டை வருகிற நகரப் பேருந்திலும், புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் செல்லும்போதும் ரங்கம்மா சத்திரத்தைச் சேர்ந்த குழந்தைகளை மட்டும் பேருந்தில் ஏற்றுவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. இது தொடர்பாக ஜூன் மாதமே நாங்கள் டிப்போவிலும் பலமுறை சொல்லியிருக்கிறோம். டிப்போவிலும் சொல்லியிருக்கிறோம். அதற்குப் பிறகு, கமர்சியல் டிவிஎஸ் செட்டில் இருக்கக்கூடிய அதிகாரிகளிடமும் பேசினோம்.

‘சார், இந்தக் குழந்தைகளை ஏன் இப்படி உதாசீனப்படுத்துகிறார்கள்? ஓட்டுநர், நடத்துநர் என்று இல்லாமல், நாங்கள் டைம் கீப்பரைப் போடுகிறோம்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்களே தவிர, அவர்கள் அதைப் பார்த்து ஒரு நாள்கூட நடவடிக்கை எடுத்தது இல்லை.” என்கின்றனர். 

 

இதையும் படிங்க: #Viralvideo வகுப்பறை முன் மது அருந்தும் பள்ளி மாணவிகள்... இதுதான் தவெக ஆட்சியின் மாற்றமா? என மக்கள் கொந்தளிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share