#BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!
புதுக்கோட்டை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்த சம்பவத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலிருந்து புதுக்கோட்டையை நோக்கி நகர அரசுப் பேருந்து, அதாவது 8-ஆம் எண் பேருந்து, நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்தப் பேருந்து ரங்கம்மா சத்திரம் அருகே வந்தபோது, பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டபோது, ஓட்டுநர் தானியங்கி கதவை மூடியுள்ளார்.
ஏற்கனவே அந்தப் பேருந்தில் அதிகளவில் கூட்டம் இருந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளும் பேருந்தில் ஏறியதால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சக பயணிகள், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும், அவர்களை ஒழுங்குபடுத்தி நிற்க வைக்க வேண்டும் என்றும் ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: #Viralvideo வகுப்பறை முன் மது அருந்தும் பள்ளி மாணவிகள்... இதுதான் தவெக ஆட்சியின் மாற்றமா? என மக்கள் கொந்தளிப்பு...!
இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, தானியங்கி கதவை திடீரெனத் திறந்துள்ளார். அப்போது தானியங்கி கதவு அருகே நின்று கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகளும், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகளும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சில ஊடகங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கூறி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சில சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களைப் போன்று இந்த சம்பவம் நடைபெறவில்லை என்று சக பயணிகள் மட்டுமல்லாது, அந்தப் பள்ளி மாணவ, மாணவிகளும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பள்ளி மாணவர்களை அஜாக்கிரதையாகக் கையாண்டதாகக் கூறி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தற்போது இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!