உஷார்... அடிச்சு நகர்த்த போகுது... 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். ஒவ்வொரு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அறிவியலில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பல்வேறு சுற்றுலா தளங்களில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: #weatherupdate: வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி ... வானிலை மையம் அறிவிப்பு!
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே... வெளுக்க போகுது மழை...!