×
 

முக்கிய வானிலை அப்டேட்! குளுகுளு கிளைமேட்! நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தொடர்ந்து ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

மேற்குவங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

இதையும் படிங்க: #RAIN ALERT: பாம்பன், தூத்துக்குடியில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

இந்த நிலையில் நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, நெல்லை ஆறு மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #RED ALERT: கோவை, நீலகிரிக்கு அதிகனமழை பெய்யும்...எச்சரிக்கும் வானிலை மையம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share