#RAIN ALERT: பாம்பன், தூத்துக்குடியில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெயர் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: #RED ALERT: கோவை, நீலகிரிக்கு அதிகனமழை பெய்யும்...எச்சரிக்கும் வானிலை மையம்!
இதனிடையே மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் சில சமயங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பயமுறுத்தும் பேய் மழை..! 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!