#BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...!
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நில வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்த நிலையில் நேற்று மாலை முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்ய வந்தது. நேற்று பிற்பகல் பிறகு மழை தீவிரமடைந்த நிலையில், நேற்று இரவு மணி முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி என மாவட்டம் முழுவதுமே பரலோக இந்த மழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம், கோலியனூர், வளவனூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் வார்னிங்...!