அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தின் நடுவே பாட்டில் எரிந்ததால் கூட்டத்தின் நடுவே பரபரப்பு.
சென்னையின் அயனாவரம் பகுதியில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கூட்டத்திற்கு நடுவே மர்ம நபர்களால் மது பாட்டில் ஒன்று வீசப்பட்டது.
மேலிருந்து வீசப்பட்ட அந்த மது பாட்டில், கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் தொண்டர் மீது விழுந்து உடைந்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் சலசலப்பு நிலவியது.
இந்தச் சம்பவத்தை அடுத்து மேடையில் பேசிய வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்கும் வரை நான் இந்த இடத்தை விட்டுப் புறப்பட மாட்டேன்" என அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கேயே முகாமிட்டனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மது பாட்டில் வீசப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் தவெக கூட்டத்தில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தற்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கியுள்ள ஆதவ் அர்ஜுனா, தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!