×
 

#BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

நீலாங்கரை வீட்டில் தன்னை விஜய் அனுமதிக்கவில்லை என சங்கீதா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மனைவி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். தன்னை வீட்டிற்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி சங்கீதா மனுவில் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரி பாதி உரிமை இருப்பதாகவும் சங்கீதா முறையிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும் எனவும் சங்கீதா தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடு இல்லாமல் தவிப்பதாக சங்கீதா தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு ‘ஓ.கே.’ சொன்ன சங்கீதா... விவாகரத்து வழக்கு வாபஸ்?!... பின்னணியில் இருக்கும் 2 காரணங்கள் இதுவே...!

விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் சங்கீதா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கேட்டால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு தன்னை மிரட்டுவதாகவும் சங்கீதா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பலமுறை முயற்சித்தும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல விஜய் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக தனது மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது... கலங்காத நண்பா.. விஜய்க்கு தாடி பாலாஜி ஆதரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share