×
 

நோவாத ஏசி கார்ல வந்து போற உனக்கே இவ்ளோ இருக்கே… மேயரை விளாசிய தூய்மை பணியாளர்கள்

கஷ்ட காலங்களில் எல்லாம் தேவைப்படும் தூய்மை பணியாளர்கள் தற்போது தேவைப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எவ்வளவு ஆணவம் இருக்கும்? முடிஞ்சா ARREST பண்ணுங்க! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆறு கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

கொரோனா காலத்தில் நாங்கள் தேவைப்படுகிறோம்., நீங்கள் மீட்டிங் போடும்போது தூய்மை செய்ய நாங்கள் தேவைப்படுகிறோம், நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தூய்மை பணிகள் மேற்கொள்ள நாங்கள் தேவைப்படுகிறோம்., ஆனால் இப்போது தேவைப்படவில்லையா என தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“ நோவாம ஏசி கார்ல வந்து போற உங்களுக்கே இவ்வளவு இருக்குன்னா… குப்பையில கை வைத்தால்தான் நாங்க சோத்துல கை வைக்க முடியும் அப்ப எங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டனர். அமுத கரங்கள் நிகழ்வு நடத்துகிறீர்களே தூய்மை பணியாளர்களுக்கு தண்ணீர் கூட கொடுப்பதில்லை என்று சாடினர். ஓட்டு கேட்கும் போது அம்மா அம்மா என்கிறார்கள்., பிறகு ஏய் போ எனக் கூறுவீர்களா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: 5வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்... குவிந்து கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share