×
 

"3 மரம் நட்டு.. 1 மரம் வெட்டு"..! மண் முதல் மக்கள் வரை... சீமான் சொல்லும் புதிய சட்டம்..!!

3 மரம் நட்டு., 1 மரம் வெட்டு என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளில் ஒன்றாக முன்வைத்துள்ள சுற்றுச்சூழல் தொடர்பான முக்கிய அறிவிப்பு "3 மரம் நட்டு.. 1 மரம் வெட்டு" என்ற கொள்கையாகும். இது தமிழகத்தின் பசுமைப் பரவலை அதிகரிப்பதற்கும், மரவெட்டு நடவடிக்கைகளை கடுமையாக கட்டுப்படுத்துவதற்கும், சமநிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியின் மையக் கருத்து, தமிழகத்தில் மரங்கள் வெட்டப்படும் போதெல்லாம் அதற்கு மாற்றாக கணிசமான எண்ணிக்கையில் புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதாகும்.

குறிப்பாக ஒரு மரம் வெட்டப்படும் போது அதற்கு பதிலாக மூன்று மரங்கள் நடப்பட வேண்டும் என்ற விகிதத்தை சட்டரீதியாக கட்டாயமாக்குவதே இதன் நோக்கம். இதன்மூலம் தமிழகத்தின் வனப்பரப்பு படிப்படியாக அதிகரிக்கும். காற்று மாசு குறையும். மழைவளம் மேம்படும். மண் அரிப்பு தடுக்கப்படும்; உயிரினங்களின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படும் என்று சீமான் வலியுறுத்துகிறார். இந்தக் கொள்கையுடன் இணைந்து, "பல கோடி பனை திட்டம்" என்ற பெருந்திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக நடப்படும் இத்திட்டம், பனைமரங்களின் பாரம்பரிய முக்கியத்துவத்தை மீட்டெடுப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம், மண் வளம் பேணுதல், நீர் தேக்கம் போன்ற பல்வேறு நன்மைகளை இலக்காகக் கொண்டுள்ளது. பனைமரங்கள் தமிழகத்தின் சின்னமாகவும், பாரம்பரிய வாழ்வியல் முறையுடன் தொடர்புடையதாகவும் இருப்பதால், இத்திட்டம் தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தும் அம்சமாகவும் கருதப்படுகிறது.மேலும், சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்களில் பசுஞ்சோலை திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

இதன்படி, ஊராட்சி அளவிலும், கிராம சாலைகளிலும், பொது இடங்களிலும் பசுமையான சோலைகள் உருவாக்கப்படும். இது உள்ளூர் மக்களுக்கு குளிர்ச்சியான சூழலை அளிப்பதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கு, மக்கள் ஓய்வெடுப்பதற்கு ஏற்ற இயற்கை இடங்களை உருவாக்கும். இந்த முழு அணுகுமுறையும் வெறும் வாக்குறுதியாக மட்டுமல்லாமல், சட்ட அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அதாவது, மரவெட்டு அனுமதிகள், வனத்துறை விதிமுறைகள் ஆகியவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, "3:1" விகிதம் கண்டிப்பாக பின்பற்றப்படும். மண் முதல் மக்களுக்கு தேவையான திட்டங்களை சீமான் தனது தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share