×
 

கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் கரூர் போலீசார் விசாரணைக்காக சென்றனர்.

2025 செப்டம்பர் 27 அன்று தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விஜய் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சம்பவத்தின் போக்குவிஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இடம் திறன் வாய்ந்ததை விட அதிகமான கூட்டம் கூடியதால் நெரிசல் அதிகரித்தது. விஜய்யின் வருகை சுமார் ஏழு மணி நேரம் தாமதமானது என்று கூறப்படுகிறது. அவர் பேசி முடித்து வெளியேறியபோது, அவரது வாகன அணிவகுப்பைப் பார்க்க மக்கள் பெரும் அளவில் முண்டியடித்ததில் நெரிசல் ஏற்பட்டு, பலர் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. 

சம்பவத்திற்குப் பிறகு பெரும் குற்றச்சாட்டு விவாதம் எழுந்தது. தவெக தரப்பினர், கரூர் பகுதியில் செல்வாக்கு மிக்க திமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தினர். அவர் திட்டமிட்டு நெரிசலை ஏற்படுத்தியதாகவும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவரது பேனர்களுடன் வந்ததாகவும், உடல்களை அவசரமாக எரித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தவெகவினர் சிபிஐ விசாரணை கோரினர். 

இதையும் படிங்க: ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!!

மறுபுறம், காவல்துறை மற்றும் அரசு தரப்பு, விஜய்யின் வருகை தாமதம், அனுமதிக்கப்பட்ட எல்லையை மீறிய கூட்டம், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது ஆகியவற்றை காரணமாகக் கூறியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கு விசாரணைக்காக கரூர் போலீசார் சென்றுள்ளனர். செந்தில் பாலாஜி அங்கு இல்லாததால் வீட்டின் பணியாளர்களிடம் விசாரித்துச் சென்றுள்ளனர். மேலும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்திலும் சிபிஐ போலீசார் விசாரணைக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஐ விசாரணை தற்போது மீண்டும் தொடங்கியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதையும் படிங்க: இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share