×
 

தாமரை மலரணுமாம்... அரசியல் பேசிய அர்ச்சகர்... பூந்து விளாசிய சேகர்பாபு...!

அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது.

ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார்.

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாமரை மலராது என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் கோவில் குருக்கள் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கையில் இருப்பதும் தாமரை தான் என்றும் அனைவரதும் மனதிலும் தாமரை மலர வேண்டும் என்றும் பேசி உள்ளார். இந்த வீடியோக்களை பகிர்ந்த இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதையும் படிங்க: போலி வாக்குகளை செருகுவதில் திமுக தீவிரம்... தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!

நாகையில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் அர்ச்சகர், தாமரை அனைவரது உள்ளத்திலும் மலர வேண்டும் என்ற கூறியது குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். திருக்கோயில் அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் குளிரும் வகையில் பக்தர்கள் நலனை நாடி அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர, அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். அப்படி இருந்தால் அந்த அர்ச்சகர் கூறிய சின்னத்தை ஆதரிப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அவரை எப்படி குருக்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த அர்ச்சகர் கூறியது குறித்து புகார் வந்துள்ளது எனவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: புலி வருது, புலி வருது..! இதே கதைதான்... முதலீடுகள் தொடர்பாக முதல்வரை விளாசிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share