சுவர் இடிந்து மாணவன் பலியான துயரம்... தலைமை ஆசிரியர், அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு...!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி சுவரிடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாரபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியின் பக்கமாட்டுச் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மோகித் என்ற மாணவன் உயிரிழந்து உள்ளார்.
மதிய உணவு இடைவேளைக்காக நடைமேடைமீது அமர்ந்து மோகித் உணவு அருந்திக்கொண்டு இருந்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. மோகித்தின் மேலே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கிய நிலையில் துடிதுடித்து மோகித்தின் உயிர் போய் உள்ளது. இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த அசம்பாவிதம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாணவனின் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாணவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்கினால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாணவனின் பெற்றோரிடம் எம்எல்ஏ எஸ்.சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பதற்றம் நீடிப்பதால் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிங்க: அவரு கையால வாங்க மாட்டேன்! ஆளுநர் ரவியை புறக்கணித்த மாணவி… பட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு…!
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவம்... அப்பவே சொன்னோம்... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!