×
 

சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

சிறுமி ஹாசினி கொலை மற்றும் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்துக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியுள்ளது.

சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் பகுதியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கொடூரமான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாபு மற்றும் ஸ்ரீதேவி தம்பதியரின் ஏழு வயது மகள் ஹாசினி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனாள். பெற்றோர் உடனடியாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மூன்று நாட்கள் கழித்து அனகபுத்தூர் பைபாஸ் சாலையருகே உள்ள புதரில் எரிந்து கிடந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தகவல்கள் இருந்தன.

இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.காவல்துறை விசாரணையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் சந்தேகத்துக்குரியவராக முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, பின்னர் உடலை எரித்து தடயங்களை அழிக்க முயன்றதாக போலீசார் குற்றம்சாட்டினர். தஷ்வந்த் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் சட்டரீதியான காரணங்களால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் தன் தாயைக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த வழக்கில் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 2018 பிப்ரவரியில் நீதிமன்றம் தஷ்வந்தைக் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.2025 அக்டோபர் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

இதையும் படிங்க: மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, வழக்கில் முக்கிய சூழ்நிலைச் சான்றுகளை போலீஸ் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறியது. கடைசியாக சிறுமியுடன் பார்க்கப்பட்ட சூழ்நிலை, சிசிடிவி காட்சிகள், ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் டிஎன்ஏ ஆதாரங்கள் ஆகியவை போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டது. அதன்படி மரண தண்டனையை ரத்து செய்து தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகள் வெளிப்பட்டன.இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் 2025 நவம்பர் மாதம் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விடுதலை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடைசி வாய்ப்பாக மீண்டும் மறு சீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share