கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!
தவெக நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விவகாரத்தில் மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் (பெண்கள்) நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு நிகழ்ச்சியை வகுப்பறையில் நேரலையாக ஒளிபரப்பி மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். மல்லிகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் திரையிட்டதாக சமூக ஊடகங்களில் வீடியோ பரவியது. இது உடனடியாக கவனத்தை ஈர்த்து, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பள்ளிகளில் அரசியல் ஊடுருவலை அனுமதிக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.
பள்ளிக்கல்வித் துறை உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில், தலைமை ஆசிரியை தன்னிச்சையாக முடிவெடுத்து, துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறியது உறுதி செய்யப்பட்டது. தலைமை ஆசிரியை மல்லிகா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: வெறும் வாயிலயே வடை சுடாதீங்க விஜய்..! பெண்கள் பாதுகாப்பில் கவனம் வேணும்... திமுக காட்டம்..!
இந்த நிலையில், தவெக கட்சி நிகழ்ச்சியை வகுப்பறையில் ஒளிபரப்பிய மேலும் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட மகாதானபுரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகவற்றைக் கழகத்தின் கட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக எழுந்த புகாருக்கு பள்ளிக் கல்வி துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் ஜெட் மாதிரி இருந்த சிஎம்..! காலி பணியிடங்களையும் நிரப்பி விடுங்க... பட்டியலிட்ட நயினார்..!