×
 

ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினம் தினம் தன் சுயலாபத்திற்காக மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அளவில் எல்லா துறைகளையும் போராட விட்டுக்கொண்டு தேர்தலுக்காக மட்டுமே சுயநலமோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த திராவிட மாடல் அரசு மீது உயர்நீதிமன்றத்தின் சாடியிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஊழல் அமைச்சர் நேரு மீது 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மக்களின் நலனை காவு கொடுத்து தமிழக மக்களுக்காக பேசுவது தமிழுக்காக பேசுவது உரிமைக்காக பேசுவது என்று ஒரு தினம் ஒரு நாடகமாடி அதே நேரத்தில் தமிழகத்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கிறது இந்த திமுக மாடல் அரசு என்றார்.

இவர்கள் நிஜமாகவே ஊழல் செய்வார்கள்., ஆனால் ஊழல் செய்வதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தால் உடனே பழி வாங்கும் நடவடிக்கை என்பார்கள் என்றும் திருடுவேன்., ஆனால் என்னை பிடிக்கக் கூடாது பிடித்தால் உடனே பழிவாங்கல் நடவடிக்கை என்று சொல்வேன்., திருடுவது அத்தனையும் மக்கள் பணம் என்று தெரிவித்தார். மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் கோடி கோடியாக மக்கள் தமிழக மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொஞ்சம் கிள்ளி கொடுப்பதை போல உங்களுக்காகவே திட்டங்களை கொடுப்பதை போல வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அரசு இந்த திமுக அரசு உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டிய அரசு என்பதை இந்த உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல் நமக்கு உணர்த்தி இருக்கிறது.

இதையும் படிங்க: “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!

தமிழக அமைச்சர் நேருவின் ஒரு துறையில் மட்டுமே 2300 கோடி ஊழல் என்றால் குற்றம் சாட்ட அமைச்சர்கள் அத்தனை பேரும் செய்திருக்கின்ற ஊழல்களை கணக்கிட்டால் மக்களே உங்கள் பணம் எவ்வளவு சுரண்டப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்ல அமலாக்கத்துறை மூன்று முறை எஃப் ஐ ஆர் பதிவு செய்ய எழுதிய போதும் அதை அப்படியே கிடப்பில் போட்டது தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் காவல்துறை என்றும் கூறினார். கூட்டணிகள் அமைத்து விட்டோம் என்று கொக்கரித்துவிட்டு ஊழல்களில் கூட்டாளிகளாக திமுக கூட்டணி செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி என்றும் கூறினார்.

இதையும் படிங்க: குடும்பப் பள்ளிகளில் இந்தி, அரசுப் பள்ளிகளில் எதிர்ப்பு! திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share