×
 

வாடிக்கையாளர்களுக்கு ஷாக்... தமிழகத்தில் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு..!

தமிழகத்தில் தயிர் மற்றும் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு ஜூலை 9ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா உள்ளிட்ட முக்கிய தனியார் நிறுவனங்கள் இந்த உயர்வை செயல்படுத்தியுள்ளன. ஒரு லிட்டர் பாலுக்கு 2 முதல் 4 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆவின் போன்ற அரசு நிறுவனங்களுடன் போட்டியிட்டு வரும் இந்த தனியார் பிராண்டுகள், கொள்முதல் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து விலையைத் திருத்தியுள்ளன. கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைந்து, அண்டை மாநிலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் இடையே கொள்முதலுக்கான போட்டி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு சற்று அதிக விலை கொடுத்து பால் சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் முதல் முறையாக விலை உயர்த்தப்பட்டபோதே நுகர்வோருக்கு சிரமம் ஏற்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ளது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் அன்றாட அத்தியாவசியப் பொருளாக இருப்பதால், குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர், தினசரி செலவினத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தயிர், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளதால், வீட்டு உணவு தயாரிப்பில் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தமிழக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!

பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், இது ஆவின் போன்ற அரசு நிறுவனங்களின் விநியோகத்தையும் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை உயர்த்தி, உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்ற குரல்களும் எழுந்துள்ளன. இந்த விலை உயர்வு தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல வாடிக்கையாளர்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். சிலர் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பால் வாங்க முயற்சிக்கின்றனர். இருப்பினும், தரம் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவை சவால்களாக உள்ளன. இந்த நிலையில், அரசு தரப்பில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குவிப்பு மற்றும் ஆவின் விநியோகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு..!! பால் தட்டுப்பாடு அபாயம்.. முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share