மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி டாஸ்மாக்கில் புது வகை சரக்குகள் கிடைக்கும்!
அதிகம் விற்பனையாகும் மது வகைகளை கொள்முதல் செய்யும் பணியை, 'டாஸ்மாக்' நிறுவனம் தொடங்கியுள்ளது. அதனால், புதிய மது வகைகள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறையில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் கடைகளில் அதிகம் விற்பனையாகும் மது வகைகளை மட்டுமே கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் பல புதிய மது வகைகள் விரைவில் தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.
முன்பு டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து எந்த மதுவகைகள் அனுப்பப்படுகின்றனவோ அவை மட்டுமே கடைகளுக்கு சென்றன. இதனால் சில நிறுவனங்களின் பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படும் நிலை இருந்தது. விற்பனை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படாததால் முறைகேடு சந்தேகங்கள் எழுந்தன. இந்த பிரச்சனையைத் தீர்க்க அரசு தற்போது உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடைகளில் எந்த மது வகைகள் அதிகம் விற்கப்படுகின்றன என்பதை இனி கணினி மூலம் துல்லியமாக கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும். ஆன்லைன் கொள்முதல் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக நடைபெற்று வந்த முறைகேடுகளை தடுக்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க: "இன்று முதல்"..! டாஸ்மாக் பார்களுக்கு திடீர் பூட்டு..! அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!
அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற புதிய மது வகைகளும் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் நுகர்வோருக்கு பல்வேறு தரமான மதுபானங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதனிடையே, டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் மேலும் சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். “முதலில் அனைத்து மது வகைகளையும் ஒரே அளவில் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் எந்த நிறுவனத்தின் மது அதிகம் விற்கிறது என்பதை பார்த்து கொள்முதல் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த புதிய முறை முழுமையான வெற்றியைப் பெறும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த புதிய முறை அமலுக்கு வந்தால், டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பதோடு, முறைகேடுகள் குறைந்து வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மது வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு... டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!