×
 

தனியாக வசித்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மைனர் சிறுவன் தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்...!

தெலங்கானாவில் தனியாக வசித்து வந்த பெண்னை நகைக்காக மைனர் மகனுடன் சேர்ந்து கழுத்தி நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் துப்பாக்கா மண்டலம் ராமக்காப்பேட்டையில் 
8 ம் தேதி அன்று  வனம் நர்சய்யாவின் விவசாய  பண்ணைக்கு அருகில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் பாதி எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ராமக்கபேட்டா கிராமத்தைச் சேர்ந்த இருவர் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதி எரிந்த நிலையில் இருந்த அடையாளம் தெரியாத  சடலம்   குறித்து   சித்திப்பேட்டை காவல் ஆணையர்  ராஷ்மி பெருமாள் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த பெண் பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  விஜயா (வயது 45) என்பதும் அவரது  கணவர்  ராமசாமி இறந்த நிலையில்  தனியாக வசித்து வந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அவருடன் நெருங்கி பழகி வந்தவர்கள், மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சி.சி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில்  தங்கத்திற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் இந்தக் கொலையைச் செய்ததை கண்டறிந்து இருவரையும்   கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்  எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் விஜயா வசிக்கும் வீட்டின் அருகே வசித்து வந்த சக்கலி ரஜிதா (38) அவரது  மைனர் சிறுவன்  சேர்ந்து விஜயாவை 8 ம் தேதி மாலை அவர்களது வீட்டிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். 

இதையும் படிங்க: முகத்தை சிதைத்தும், துடிதுடிக்க கொடூரமாக வெட்டியும் இருவர் கொலை... காஞ்சிபுரத்தில் பயங்கரம்...!

பின்னர் அதே இரவில், அவர்கள் இருவரும் ராமக்கப்பேட்டை கிராமத்தின் புறநகர்ப் பகுதியில், அவரது டி.வி.எஸ். எக்ஸ் எல்  வாகனத்தில் சென்று முதலில் ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி கொண்டு விஜயா உடலை அதே வாகனத்திம் முன்னாள் வைத்து கொண்டு சென்று  பெட்ரோல் ஊற்றி சாலையோரத்தில் எரித்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இதேபோன்று கடந்த மே  மாதம் 28 ம் தேதி  அரசு வீடு இல்லாதவருக்கும்   வழங்கிய  ​​இரட்டைப் படுக்கையறையில் வசித்து வந்த  ரேகாவையும் கொலை செய்து  அச்சுமயிபள்ளி கிராமத்தின் வனப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி  கொன்றது   தெரியவந்தது.  

ஜூன்-2025-ல் பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா என்பவரும்  காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது ​​அவரைத் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த  6 சவரன்  முத்துக்களுடன் கூடிய தங்க செயினை பறித்து சென்றதையும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 சவரன் தங்க நகைகள்,  வெள்ளி நகைகள்,  நீல நிற டி.வி.எஸ். எக்ஸ்.எல் வாகனம், ரூ 1.03 லட்சம் பணம், இரண்டு மொபைல்கள் பறிமுதல் செய்து  ரஜிதாவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவரது மகன் மைனர் சிறுவனை  சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பினர். மேலும் இவர்கள்  ​​பூம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரை  கொலை செய்ய இலக்கு வைக்கப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில்  தெரியவந்ததாக  சித்திப்பேட்டை காவல் ஆணையர் ரஷ்மி பெருமாள் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share