×
 

விசாரணைக்குச் சென்ற விவசாயி விஷமருந்தி தற்கொலை... இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

தென்காசி சிவகிரி காவல் நிலையத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதால் மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் முரளிதரன் உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 65. இவர் அந்த பகுதியில் தனது இடிந்த நிலையில் ஆன வீட்டை மீண்டும் புதுப்பிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பாக கட்டிட பணியை தொடங்கி இருக்கிறார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரரான பேச்சிப்பாண்டி, என்பவருக்கும் அந்தோணி ராஜுக்கும் இடையே நில பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அந்த நபர் சிவகிரி காவல் நிலையத்தில் அந்தோணி ராஜ் மீது புகார் அளித்துள்ளார். 

அது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிவகிரி காவல்துறையினர் அந்தோணி ராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். விசாரணை நடத்திய நிலையில் மரியாதை குறைவாகவும் கன்னத்தில் அடித்தும் காவல்துறையினர் அந்தோணி ராஜை அவமானம் செய்துள்ளனர்.  மேலும் ஒரு தலைப்பட்சமாக செயல்படும் விதமாக எதிர் தரப்பினர் வீட்டில் உள்ள பெண் ஒருவர் குளிப்பதை அந்தோணி ராஜ் பார்த்தார் என பொய்யாக புகாரை கொடுக்க அறிவுறுத்தி உள்ளனர். 

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தோணி ராஜ் மே 21 ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றபோது விஷம் குடித்து சென்றார்.  சிறிது நேரத்தில் காவல்நிலத்தில் வைத்து மயங்கி விழுந்து இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக காவல்துறையினர் அந்தோணி ராஜை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தற்பொழுது இரவோடு இரவாக அந்தோணி ராஜ் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: #BREAKING பாலியல் தொல்லையால் +1 மாணவி தற்கொலை... 26 நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது...!

மேலும் தனது தந்தையை வேண்டுமென்றே பொய் புகார் கூறி மன உளைச்சலை ஏற்படுத்திய பக்கத்து வீட்டுக்காரரான பேச்சுப் பாண்டி, காவல் நிலையத்திற்கு வரவழைத்து தாக்கி அவமானப்படுத்திய காவலர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தோணி ராஜ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நெல்லை சரக டிஐஜி பொறுப்பு சேகர் தேஷ்முக்  வழக்கின் உண்மை தன்மையை விசாரணை செய்வதற்காக நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிவகிரி காவல் நிலையத்தில் சம்பவத்தன்று யார் யாரெல்லாம் பணியில் இருந்தார்கள் அனைத்து காவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர் மேலும் அந்தோணி ராஜ் குடும்பத்தினரிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

விசாரணைக்கு பின் காவல்துறையினர் மீது தவறுகள் ஏதேனும்  நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  3 நாட்களுக்கும் மேலாக நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் இருந்த அந்தோணி ராஜ் சிகிச்சை பலனின்றி மே.24 ல் ஞாயிற்றுக்கிழமை  பரிதாபமாக இறந்தார். 

மேலும் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரணை நெல்லை சரக டி ஐ ஜி சேகர் தேஷ்முக்  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையில் அந்தோணி ராஜ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சிவகிரி ஆய்வாளர் மற்றும் இதில் தொடர்புடைய காவலர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என அந்தோணி ராஜ் தரப்பினர் காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் உண்மை தன்மையை விசாரணை செய்த நெல்லை சரக டிஐஜி சேகர் தேஷ்முக், வழக்கில் சிக்கிய சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன், அன்று காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் கனகராஜ், முத்துக்கண்ணன் என 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: திரையுலகில் மாபெரும் அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share