×
 

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஈத்தங்காடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மூன்று சிறை வார்டன்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் லாக்-அப் மரணக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்த சபரிவர்மனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு (பிரேத பரிசோதனை) அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்த நிலையில், இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

இந்நிலையில், தற்பொழுது நாகர்கோவில் அடுத்த ஈத்தங்காடு சந்திப்பில் சபரிவர்மனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு திடீரெனப் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற நடுவர் முன்னிலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, அக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

திடீர் சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள உயர் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தைக் கலைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share