ஹாப்பி நியூஸ்... வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் பட்டண உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டண உயர்வை மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது லாரி உரிமையாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள ஒரு முக்கியமான முடிவாகும்.
கடந்த 2025 நவம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாகனங்களின் வயதைப் பொறுத்து தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.2,500-இலிருந்து ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவற்றுக்கு ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இந்த கட்டண உயர்வை கடுமையாக எதிர்த்தன. பழைய கட்டணத்தைத் தொடர வேண்டும் என்பதோடு, ஏற்கெனவே டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணங்கள், பராமரிப்புச் செலவுகள், சுமை குறைவு போன்ற பல சிரமங்களுக்கு இடையே இந்த உயர்வு தாங்க முடியாத சுமையாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். கடந்த சில மாதங்களாகவே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரிகள் தகுதிச் சான்று இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: பிப்.20 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு...!
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. பிப்ரவரி 25 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது.இந்த சூழலில் தமிழ்நாடு அரசு லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் உயர்த்தப்பட்ட கட்டணத்தை அமல்படுத்தாமல் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!