×
 

அக். 16 வரை தான் டைம்... பொது சொத்து சேதம் குறித்து வழிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கெடு...!

பொது சொத்துக்கள் சேதம் குறித்து வழிமுறைகளை வகுக்க அக்டோபர் 16ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. ஆனால்,வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் நடைபெறும் விஜயின் பிரச்சாரப் பயணம், மக்களிடையே ஆதரவைப் பெறுவதோடு, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசின் அழுத்தத்தால் காவல்துறை இடையூறு செய்வதாக த.வெ.க தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுவை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தினர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்றம் நிர்ணயத்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கிட வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு சரமாரி கேள்வி முன் வைக்கப்பட்டது. நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவதுதானே என்றும் தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என்றும் கேள்வி நீதிபதி எழுப்பினார். மேலும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: விஜய் விட்ட புருடா… உண்மையை list போட்ட தமிழக அரசு… முடிச்சு விட்டாய்ங்க…!

விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தவெக தொடர்ந்த வழக்கில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்துகள் சேதமடைந்ததை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், பொதுக் கூட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளிடமே இழப்பீட்டை வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க அக்டோபர் 16வரை அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. பரப்புரைக்கு அனுமதிக்கோரிய விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு.. முதல்வரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share