×
 

இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விகே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாமக அதிகாரப்பூர்வமாகப் புதிய கூட்டணி அமைத்துள்ளன.

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விகே.சசிகலா மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று ஒரு மிகப்பெரிய மெகா கூட்டணியாக மலர்ந்துள்ளது. விகே.சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) மற்றும் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி (PMK) ஆகிய இரு கட்சிகளும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் துரோக அடையாளங்களைக் களைந்து, மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சியையும் மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும் என இரு தலைவர்களும் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

கூட்டணி குறித்துப் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது ஒரு வெற்றிக் கூட்டணி. வரும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடும். எங்களுடன் இணைய விரும்பும் பிற கட்சிகள், எங்கள் இருவருடனும் (சசிகலா மற்றும் ராமதாஸ்) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்," என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் களம் கண்டு வரும் நிலையில், சசிகலா மற்றும் பாமக இணைந்துள்ள இந்தப் புதிய மூன்றாவது அணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் இந்தக் கூட்டணியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share