கட்சிக்கொடி காட்டினா #OFFER குடுப்பீங்களா... டோல் கட்டணம் குறித்து மதுரை கோர்ட் சரமாரி கேள்வி!!
கட்சிக்கொடி கட்டி வரும் வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் இருந்து சலுகையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பல்வேறு கருத்துகளை முன் வைத்தார். முதலில் குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலைகளை சீரமையுங்கள் என்று அறிவுறுத்தினார்.
மேலும் சிறு பிரச்சனை செய்தாலும் பொதுமக்களை அங்குள்ளவர்கள் தாக்கும் சூழல் இருப்பதாகவும் கட்சிக்கொடி கட்டி வரும் வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!
கட்சிக்கொடி கட்டி வரும் வாகனங்களுக்கு சலுகையா என கேள்வி எழுப்பிய நீதிபதி சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக் கோரிய மனுவை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!