யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!
தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணையும் யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம் என்று அமைச்சர் ஆனந்த் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் களம் கடந்த சில மாதங்களாக மிகுந்த பரபரப்புடன் உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக மாறியுள்ளது. இந்த இணைப்புகள் அதிமுகவுக்குள் உள்ள உட்கட்சி பூசல்கள், தோல்வியின் தாக்கம் மற்றும் தவெகவின் புதிய அரசியல் ஈர்ப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.
தவெக ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர், அதிமுகவின் உட்கட்சி பிரிவினை மேலும் தீவிரமானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்ற தலைவர்களின் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் பலரை தவெகவை நோக்கி தள்ளின.
மே 2026-ல் அதிமுகவைச் சேர்ந்த மூன்று சிட்டிங் எம்எல்ஏக்கள் – மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்று அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர்.
இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!
தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணையும் யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம் என்று அமைச்சர் ஆனந்த் உறுதியுடன் தெரிவித்துள்ளார். அரசியல்வாதியாக அல்ல மக்களுக்கு சேவை செய்யும் மனிதராகவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!