தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!
தவெக நிர்வாகி விஜய் கூட்டத்தில் உயிரிழந்த சம்பவத்தை அதிமுக செய்தி தொடர்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற விஜய்யின் கூட்டத்தில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற இந்த நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரசார நிகழ்ச்சியில், சூரஜ் என்ற 37 வயது இளைஞர் திடீரென உயிரிழந்தார். இது கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த கொடூர நெரிசல் சம்பவத்தை நினைவூட்டி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சூரஜ் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்த அவர், சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள வெள்ளிப்பட்டறை தொழிலில் ஈடுபட்டு வந்தார். இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய் பேசத் தொடங்கியபோது, கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. பலர் வெயிலால் மயக்கமடைந்தனர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் சூரஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் கரூர் நிகழ்வோடு ஒப்பிடப்பட்டு பேசப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதில் 11 குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அந்த சம்பவத்தால் கட்சி நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் கூட்டங்களை நடத்தி வந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்கியிருந்தனர்.
இதையும் படிங்க: “உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...!
இருந்தபோதிலும், இன்று சேலத்தில் இப்படி ஒரு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. விஜய் கூட்டத்தில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு செல்லுவதாக இருந்தால் இனிமேல் சவப்பெட்டியோடு தான் செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது போன்ற கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: சேலம் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி உயிரிழப்பு..! பேரதிர்ச்சி..!