நாளை சட்டமன்ற கூட்டத்தொடர்! பனையூரில் தவெக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்!
பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை அடுத்த பனையூரில் அமைந்துள்ளத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அரசியல் அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சபைக் களத்தில் ஆளுங்கட்சியாகத் தவெக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மற்றும் அதன் மீதான விவாதங்களின் போது சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு முதிர்ச்சியுடனும், சாதுரியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாகப் பொதுச்செயலாளர் ஆனந்த் பல முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.
குறிப்பாக, அவையில் எதிர்க்கட்சிகள் தொடுக்கும் காட்டமான கேள்விக் கணைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்குத் துறை சார்ந்த அமைச்சர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி, உரிய ஆதாரங்களோடு எவ்வாறு துல்லியமாகப் பதிலளிக்க வேண்டும் என்பது குறித்தும், சபையின் மாண்பைக் காக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் பனையூர் கூட்டத்தில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: குறுக்கு வழி ஆட்சி... பனையூர் பங்களாவில் பதுங்கல்..! உதயநிதி துணிச்சல பார்த்து இருக்கீங்களா CM சார்..? விளாசிய அப்பாவு..!
இதையும் படிங்க: ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!