×
 

அப்பாடா விஜயை பார்த்தாச்சு! கொத்து கொத்தாக கலையும் கூட்டம்... காலியாகும் திடல்

காலை முதல் வெயிலை பொருட்படுத்தாமல் காத்திருந்த தொண்டர்கள் விஜயை கண்டதும் கூட்டம் கூட்டமாக கலைய தொடங்கினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரபத்தி கிராமத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கு அடித்தளமாக இந்த மாநாடு அமைந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கட்சியின் செல்வாக்கை தென் மாவட்டங்களில் வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளப்பட்டன. 

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். காலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர்.3 மணி அளவில் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது. விஜயின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். தொடர்ந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடல் ஒலிக்க விஜய் விழா மேடைக்கு வந்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரவேற்றார். தொடர்ந்து மாநாட்டில் தொண்டர்களை நோக்கி சென்று சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட ramp walk மேடையில் நடந்து சென்று கைகளை அசைத்தார். அப்போது தொண்டர்கள் தூக்கி எறியும் கட்சி துண்டுகளை தனது கழுத்தில் எடுத்து மாலையாக போட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தலைவா… வந்துட்டியா! ஆரவாரத்தில் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்த தொண்டர்கள்...

விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆரவாரத்தில் காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த கூட்டம், விஜய் வந்ததை பார்த்ததும் கொத்து கொத்தாக கலைந்து சென்றனர். 

இதையும் படிங்க: #BREAKING: அரங்கம் அதிர மதுரையில் விஜய்… சிறப்பு பாடலுடன் மாஸ் என்ட்ரி! குதூகலத்தில் தொண்டர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share