×
 

உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ எதிர்கொள்ளும் வகையில் அரசியல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே நடத்திய கூட்டங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக வேலூர் மாவட்டத்தில் பெரும் நிகழ்ச்சியை அவர் திட்டமிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்காக சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் கொண்ட திடல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இதயக்கனி படத்தைப் பார்த்த பின் இ.பி.எஸ் அதிரடி...! 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!

சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை மனதில் கொண்டு, வேலூர் மாவட்ட காவல்துறை இந்நிகழ்ச்சிக்கு கடுமையான விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தவெக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் சார்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், 20 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்று, தேவையான உறுதிமொழிகளை அளித்த பின்னரே அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க QR கோட் அடிப்படையிலான அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. போதிய இடவசதி, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மருத்துவ ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

விஜய் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக காரில் வேலூர் வருகிறார். அவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து செல்லக்கூடாது என கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்குமாறு கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சேலம், ஈரோடு கூட்டங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசிய விஜய், இந்த அகரம்சேரி நிகழ்ச்சியில் எத்தகைய தாக்குதல் முழக்கங்களை எழுப்புவார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share