×
 

வாட்டி எடுக்கும் வெயில்..! விஜய்க்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் மயக்கம்..!!

கடும் வெயிலால் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சுகுமார் மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருப்பூரில் ரோடு ஷோ மற்றும் பரப்புரை செய்கிறார். பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை இந்த பிரச்சார பயணம் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் கோவைக்கு சென்றடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ரோடு ஷோவை தொடங்கினார். இதற்கிடையில், சூலூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம். சுகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை வரவேற்கக் காத்திருந்தபோது மயக்கமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெற்றது. சூலூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சுகுமார், கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். அவர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு, கூட்டங்கள், கோயில் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களிடையே ஆதரவைத் திரட்டி வருகிறார்.

இதையும் படிங்க: ரூ.8000 கூப்பன் மாதிரி..! தவெக - திமுகவினர் இடையே கைகலப்பு..! கும்பகோணத்தில் பரபரப்பு..!!

இந்நிலையில், திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் அவர் கோவையிலிருந்து ரோட் ஷோ நடத்தினார். இதனை முன்னிட்டு, வேட்பாளர் சுகுமார் உள்ளிட்ட தொண்டர்கள் அவரை வரவேற்கத் தயாராகக் காத்திருந்தனர். நீண்ட நேரம் நின்று காத்திருந்ததால் சுகுமார் திடீரென மயக்கமடைந்தார். அவரைச் சுற்றியிருந்த தொண்டர்கள் உடனடியாகத் தண்ணீர் கொடுத்து அவரைத் தேற்றினர். சுமார் ஒன்றரை மணி நேரமாக விஜய்க்காக காத்திருந்த நிலையில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் சுகுமார் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share