ARREST VIJAY... சுயநல அரசியலுக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? போர்க்கொடி தூக்கிய நடிகைகள்...!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை கைது செய்ய வேண்டும் என நடிகைகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 10 நிமிஷம் கரண்ட் கட்... மிதிச்சு உயிரே போச்சு... உண்மையை போட்டு உடைத்த பெண்...!
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகைகள் வலியுறுத்தியுள்ளனர். அரெஸ்ட் விஜய் என நடிகை ஓவியா தனது instagram பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் நடிகை கயாது லோகர் விஜய் மீது கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். விஜய் பேரணிகள் தனது நெருங்கிய நண்பரை இழந்ததாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இவையெல்லாம் தமிழக வெற்றிக்கழகத்தின் சுயநல அரசியலுக்காக என்றும் விஜய் உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: என்ன சொல்லித் தேற்றுவது… உடைந்துப் போன உதயநிதி… கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி…!