கரூர் துயரச் சம்பவம்… இரவுக்குள் கைது செய்ய தீவிரம்… தவெகவில் பதற்றம்…!
கரூர் சம்பவத்தின் எதிரொலியாக தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நாற்பது பேர் பலியாகி இருந்தனர். இன்று மேலும் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அது எப்படி சொல்லிவெச்ச மாதிரி டக்கு டக்குனு நடந்துச்சு… சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்…!
இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் பிரச்சாரம் திட்டமிட்டே தாமதம்... எதற்கு தெரியுமா? FIR-ல் பகீர் தகவல்...!