×
 

ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

மகளிர் தின கொண்டாட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின கொண்டாட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் மகளிர் காண வாக்குறுதிகளை அறிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த உடன் பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதுகாப்பிற்கு தனி இலாகா அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 60 வயதை கடந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற விஜய் வாக்குறுதி கொடுத்தார். மதிப்புமிகு மகளிர் திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அண்ணன் சீர் திட்டம் என்ற பெயரில் பெண்களின் திருமணத்திற்கு எட்டு கிராம் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும் என்று கூறினார். கல்வி இடையேயற்றல் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் காமராஜர் கல்வி திட்டம் பெயரில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி இடைநிற்றலே இல்லாமல் செய்வதற்கு ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் பொருளாதார உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: என்ன நடந்தாலும் விஜய் பக்கம் தான்..! சர்ச்சைகளை LEFT HAND- ல் டீல் செய்யும் பெண்கள்..!!

வெற்றிப் பயணம் திட்டம் என்ற பெயரில் அரசு போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும் என்றும் இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களே இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும் என்ற தெரிவித்தார்.

சாதாரண உடலில் இருக்கும் இந்த படையைச் சேர்ந்த பெண்கள் "BODY CAM" ஆங்காங்கே பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தார். மாநில முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி கொடுக்க அஞ்சலையம்மாள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். Smart panic buttons அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார். சிசிடிவி கேமராக்களும், விளக்குகளும் இல்லாத வகையில் ZERO DARK SPOTS உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவசர நிலைகளை கண்காணிக்க அதிநவீன கட்டளை மையங்கள் அமைத்து பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். பெண்களுக்கு மிகவும் தேவையான நாட்களில் பொது வினியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலை இல்ல சானிட்டரி PADS வழங்குவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஐந்து லட்ச ரூபாய் வரை பெண்களுக்கு வட்டி இல்லா நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக தாய்மாமன் சீர் என்ற பெயரில் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் பேபி வெல்கம் கிட் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share