சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!
முதற்கட்டமாக அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் அவர் கையில் போடப்பட்டிருந்த டாட் அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வடலூர் அருகே கண்ணுத்தோப்பு புறவழி சாலையில் 38 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைந்து மண்ணில் புதைந்து கிடந்தார். வடலூர் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை செய்ததில் அவர் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது கள்ளத்தொடர்பில் அவரை அடித்துக் கொலை செய்தார்களா இல்லை வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கண்ணு தோப்பு பாலம் அருகே புறவழிச்சாலை பணி நடக்கும் இடத்தில் மண்ணில் முகம் சிதைந்த நிலையில் 38 வயது மதிக்கத்தக்க பெண் உடல் புதைந்த நிலையில் கிடந்துள்ளது அப்பகுதி வயல்வெளிக்குச் சென்ற பொதுமக்கள் இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போனவர் உடலை மீட்டு சிதம்பரம் முத்தையா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலை குறித்து நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் கடலூர் டிஎஸ்பி என மூன்று டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: 10 மாதம் தலைமறைவு... தட்டித் தூக்கிய போலீஸ்...!! கதறி அழுத சுர்ஜித்தின் தாய்..!!
முதற்கட்டமாக அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் அவர் கையில் போடப்பட்டிருந்த டாட் அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் அந்த விசாரணையில் அந்த பெண் வடலூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஓபிஆர் நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி மஞ்சுளா என தெரிய வந்தது.
பின்னர் போலீசார் கண்ணன் இடம் விசாரணை செய்ததில் மஞ்சுளா கடந்த செவ்வாய்க்கிழமை மகள் தாரா ஸ்ரீ சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டு பார்ட் டைம் ஆக வேலை பார்த்து வருகிறார். மகளை பார்த்துவிட்டு புதன் கிழமை அன்று இரவு அவர் சென்னையில் இருந்து வடலூர்க்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மஞ்சுளாவின் செல்போன் இரவு 11 மணி அளவில் ஆன்லைனில் இருந்துள்ளது பின்னர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது நாங்கள் மஞ்சுளாவை தொடர்பு கொண்டோம் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. பின்னரின் மக்களிடம் கேட்டோம் அவர் புதன்கிழமை இரவு பஸ் ஏறிவிட்டார் என்று கூறினார் பின்னர் பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை இந்த நிலையில் அவர் இறந்ததாக போலீசார் கூறினார் என்று இவ்வாறு கூறினார்.
பின்னர் போலீசார் கண்ணனை விசாரணை செய்ததில் கண்ணன் மேட்டுக்குப்பத்தில் மஞ்சுளாவுக்கு துணிக்கடை வைத்துக் கொடுத்து நடத்தி வந்துள்ளார் அப்பொழுது மஞ்சுளா வடலூர் பகுதியை சேர்ந்த வாலிபர் உடன் பேசிக்கொண்டு இருந்ததால் கடையை 4 மாதம் முன்பு காலி செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். கண்ணன் தனது மனைவியுடன் செல்வகுமார் பேசிக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார் எனக்கு அவர் மேல்
தான் சந்தேகம் என்று கூறுகிறார்.
போலீசார் மஞ்சுளா செல்போன் என்னை ஆய்வு செய்ததில் அதில் இரண்டு எண் வெகு நேரமாக மஞ்சுளாவிடம் பல நாட்களாக பேசிக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது பின்னர் அந்த நம்பர் யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதில் ஒரு எண் செல்வகுமார் மற்றொரு எண் யார் என்று விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.
வடலூர் பெண்ணை கொலை செய்த சம்பவம் கள்ள தொடர்பாக இருக்கலாமாஇல்லை வேறு ஏதாவது காரணமா என்று வடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை கொடூரம்..! சிறுமி கொலை வழக்கில் SIT கோரி வழக்கு..! ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!