இதெல்லாம் தலைவன் செய்யுற வேலையா... கோழைத்தனம்! விஜயை விமர்சித்த நடிகர் S.V. சேகர்...!
பிரச்சனை நடந்ததும் ஓடியது கோழைத்தனம் என விஜயை நடிகர் எஸ்.வி சேகர் விமர்சித்தார்.
தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த பிறகு விஜய் கரூரில் இருந்து சென்னைக்கு திரும்பினார். பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சென்று சந்திக்கவில்லை என்றும் வெறும் அறிக்கைகளை மட்டுமே விடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தனது மௌனத்தை விஜய் கலைத்தார்.
விஜயின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. வேண்டுமென்றால் தன்னை பழிவாங்குங்கள் என்றும் தனது தொண்டர்களையோ அல்லது நிர்வாகிகளையோ பழிவாங்க வேண்டாம் எனவும் விஜய் கூறியிருந்தார். விஜய் எதற்காக வீட்டிலேயே முடங்கி இருக்கிறார் என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காமல் இருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 10 ஆயிரம் பேர் என எப்படி சொன்னீங்க? தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!
இந்த நிலையில் பிரச்சனை நடந்த இடத்தில் இருந்து ஓடிப்போனது கோழைத்தனம் என நடிகர் எஸ். வி சேகர் விஜயை விமர்சித்தார். இது தவறானது என்றும் தலைவனுக்கு உண்டான அடிப்படை தகுதியே அல்ல எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களை சந்திக்காத விஜய்... மனிதாபிமானமே இல்லை! MP கனிமொழி விளாசல்...!