×
 

விசில் கோலம் போடக்கூடாது..! மாநகராட்சி ஊழியர் அழித்ததாக குற்றச்சாட்டு..!!

விசில் கோலத்தை மாநகராட்சி ஊழியர் தண்ணீர் ஊற்றி அளித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண் ஆதரவாளர்களிடம் வீட்டு வாசல்களில் விசில் சின்னத்துடன் கோலம் போடுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இது த.வெ.கவின் தேர்தல் சின்னமான விசிலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. அவரது இந்த அழைப்பை ஏற்று, பல பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக விசில் கோலம் வரைந்தனர்.

இது பாரம்பரிய கோலம் வரையும் பழக்கத்துடன் அரசியல் ஆதரவை இணைக்கும் ஒரு கலாச்சார வெளிப்பாடாகவும் பார்க்கப்பட்டது.இந்நிலையில், செம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு வாசலில் பெண் ஒருவர் விசில் கோலம் போட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஊழியர் ஒருவர், அந்தக் கோலத்தைப் பார்த்து அதை வரையக்கூடாது என்று கூறியதாகவும், பின்னர் தண்ணீர் ஊற்றி அந்தக் கோலத்தை அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்த வீடியோ ஒன்றை அந்தப் பெண் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில், ஊழியர் கோலத்தை அழிப்பது தெளிவாகத் தெரிவதாகவும், அதற்கான ஆதாரங்களுடன் அவர் குற்றம் சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: அண்ணே..!! விசில் சின்னத்துல தான் ஒரு குத்து..!! வீடியோ ரிலீஸ் செய்தவர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!

இந்த வீடியோ வெளியான பிறகு, சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் எழுந்தது. த.வெ.க ஆதரவாளர்கள் இதை அரசியல் பழிவாங்கல் என்று கருதி கண்டனம் தெரிவித்தனர். மாநகராட்சி ஊழியரின் செயல் அரசியல் சின்னத்தை அழிப்பதாகவும், பெண்களின் கலாச்சார வெளிப்பாட்டை அவமதிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதையும் படிங்க: அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share