ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?
வயநாட்டில் தன்னுடன் குடும்பம் நடத்திய பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, அவருடைய 9 வயது மகளைக் காட்டிற்குள் கடத்தி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடையூர் குன்னு பகுதியை சேர்ந்தவர் பிரவீனா (வயது 34). இவருக்கு முதலில் சதீஷ் என்பவர் உடன் திருமணமாகி, அணர்கா (14), அபினா (9) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிரவீனாவிற்கு திலீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளகாதலாக மாறியுள்ளது. திலீஷுடன் வாழ ஆசைப்பட்ட பிரவீனா, தனது முதல் கணவரான சதீஷை விட்டு பிரிந்து, அவருடன் சென்று விட்டார். மேலும் தனது இரு மகள்களையும் தன்னுடனே அழைத்து சென்றுள்ளார் பிரவீனா.
இதனையடுத்து 4 பேரும் வயநாடு மானந்தவாடி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே திலீஷுடன் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பிரிந்து செல்ல பிரவீனா முடிவு செய்ததால், ஆத்திரமடைந்த திலீஷ் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த தகராறு முற்றவே கோபத்தின் உச்சிக்கு சென்ற திலீஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பிரவீனாவை மட்டுமின்றி அவரது மூத்த மகளான அனர்காவையும் திலீஷ் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் சிறுமியின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் கருப்பு அட்டையைச் செருகி நூதன கொள்ளை.. வசமாக சிக்கிய வடமாநில கும்பல்..!
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, படுகாயமடைந்த சிறுமி அனர்காவை மீட்டு சிகிச்சைக்காக மானந்தவாடி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிரவீனா மற்றும் அவரது மூத்த மகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது இளைய மகளான அபினா எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது அவர் தனது தாய் மற்றும் அக்காவை திலீஷ் கத்தியால் வெட்டுவதை பார்த்து பயத்தில் அங்கிருந்து எங்காவது சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் விசாரித்த பின்னர் தான், திலீஷ் சிறுமி அபினாவை அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ட்ரோன் மூலம் தீவிரமாக தேடி சிறுமியை பத்திரமாக மீட்டதுடன், திலீஷை கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு.. ஐஎஸ்ஐ-உடன் நெருக்கமாக இருந்த உ.பி இளைஞர் கைது..!