நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் ஐ.டி. துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ.) பரிந்துரையின் பேரில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி கும்பல்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டது.
போட்டித் தேர்வு மாணவர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். “தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு டெலிகிராம் ஒரு புகலிடம். யு.பி.எஸ்.சி., வங்கி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கான குழுக்கள், சேனல்கள் மூலம் இலவசமாக படிப்புக் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் பகிரப்படுகின்றன.
இதையும் படிங்க: இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!
4 ஜி.பி. வரை ஒரே கோப்பாக அனுப்பும் வசதி, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை” என மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ஐ.டி. துறையினரும் இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பல ஐ.டி. நிறுவனங்கள் உள்துறை தகவல் பரிமாற்றம், வாடிக்கையாளர் சேவை, ஆன்லைன் பயிற்சி ஆகியவற்றுக்கு டெலிகிராமைப் பயன்படுத்துகின்றன. சிலர் தவறாகப் பயன்படுத்துவதற்காக முழு தளத்தையும் முடக்குவது சரியல்ல” என அவர்கள் கூறுகின்றனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்முனைவோரும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள டெலிகிராமை நம்பியுள்ளனர். ரயில்வே துறையிலும் உள்துறை தகவல் பரிமாற்றத்துக்கு இந்த செயலி பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. “இந்தத் தடை தற்காலிகமானது மட்டுமே. தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் தடை விவகாரம் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் டிஜிட்டல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடை முழுமையாக அகற்றப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மேலும் 2 பேர் கைது! சாட்டையை சுழற்றும் சிபிஐ!!