சுவாமிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணப்படையூர் கிராமத்தில் ஜேசுதாஸ் மற்றும் மேரி செல்வராணி ஆகியோருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் இடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் நாட்டு வெடிகள் மற்றும் மத்தாப்புகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரை முழுவதும் தரைமட்டம். காவல்துறையினர் விசாரணை. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். இதே கட்டிடத்தில் கடந்த ஒன்பதாம் தேதி தீ விபத்து ஏற்பட்டு ஒரு கட்டிடம் தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது .
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனப்படையூர் கிராமத்தில் ஜேசுதாஸ் மற்றும் மேரி செல்வராணி ஆகியோருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடம் உள்ளது. இங்கு திருவிழாவிற்கு தேவையான வெடிகள், வானவெடிகள், மத்தாப்புகள், ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது .
தற்போது அதிக அளவு கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஏராளமான நாட்டு வெடிகள், வானவெடிகள் மத்தாப்புகள், தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி இதே இடத்தில் நாட்டு வெடிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. இது தொடர்பாக கியு பிரிவு காவல்துறையினர் மற்றும் சுவாமிமலை காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவையே உலுக்கிய கோர சம்பவம்... 4 பேர் உடல் சிதறி பலி... மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு...!
இந்நிலையில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் அன்னை மாதா பயர் ஒர்க்ஸில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு வந்த மக்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். சுவாமிமலை காவல் நிலையத்தார் மற்றும் க்யூ பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .
தற்போது தொடர் திருவிழாக்கள் நடைபெற்ற வருவதால் 100 கிலோவிற்கு மேலான நாட்டு வெடிகள் இருப்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தினால் இருப்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான மத்தாப்புகள் தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.வெடி விபத்தினால ஏற்பட்ட சத்தமும், நில அதிர்வும் சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் பேரதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓட்டு போட்டது நாங்க..! ஒயின் ஷாப்பையே எடுப்பீங்களா.? குடிமகன்கள் ஆவேசம்..!