விழுப்புரம் தொகுதி தவெக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், உள்ளாட்சி பொறுப்புகளுக்கு நிர்வாகிகளிடம் பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தொகுதி தவெக மாவட்ட செயலாளராக இருப்பவர் மோகன்ராஜ். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு 68,863 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தேர்தலுக்கு முன்பாக கட்சி பொறுப்புகளுக்கு மோகன்ராஜ் பணம் கேட்பதாக அக்கட்சியின் நிர்வாகிகளே பகிரங்கமாக ஊடகத்தின் முன்பாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் தேர்தலின் போது பரப்புரையில் ஈடுபடாமல் இருக்க திமுக, அதிமுக என இரு வேட்பாளர்களிடமும் மோகன்ராஜ் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அது குறித்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற மறுநாளே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்தித்த மோகன்ராஜ் டெண்டர் குறித்தும் கமிஷன் குறித்தும் கேட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட்டுக்கு நிர்வாகியிடம் மோகன்ராஜ் பணம் கேட்கும் இரண்டு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் நிர்வாகி ஒருவரிடம் "கேட்டது என்ன ஆனது என கேட்கிறார்.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!
அதற்கு அந்த நிர்வாகி ஏற்கனவே ஒரு ரூபாய் கொடுத்துள்ளேன் மாவட்டம், வேட்பாளராக அறிவித்த பின்னர் மீது மூன்று ரூபாயை தருகிறேன் என கூறுகிறார். நிர்வாகியிடம் பணம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து மோகன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்ற வண்ணம் உள்ளது. ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.
இதையும் படிங்க: குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!