தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்கியது. முதல் நாளிலேயே தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து திருச்சியிலும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன்னதாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஓட்டுப் போட வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை (NRIs) நோக்கி ஒரு சக்திவாய்ந்த அழைப்பை விடுத்தது பெரும் அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒற்றை வார்த்தைக்கு பின்னால் பெரும் எதிரொலி எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டுடன் உணர்வுபூர்வமான தொடர்பு கொண்டவர்கள், இந்த அழைப்பை ஏற்று தேர்தல் நாளான ஏப்ரல் 23, 2026 அன்று வாக்களிக்க தமிழ்நாட்டுக்கு பயணம் செய்யத் திட்டமிடுகின்றனர். இது இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையின் 22 தொகுதிகளிலும் திமுக தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!
உங்கள் ஓட்டு உங்கள் தாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்ற செய்தியை உள்ளடக்கியதாக பலர் புரிந்துகொண்டனர். இதன் விளைவாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமான பயண டிக்கெட் பதிவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. பலர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வர திட்டமிடுகின்றனர். விஜய்க்காக தாங்கள் ஓட்டுப் போட தமிழ்நாட்டுக்கு வருவதாக தங்கள் FLIGHT டிக்கெட்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல்..! கடைசி நாள்..! அதிமுக பொதுச் செயலாளர் EPS இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!