உக்ரைன், கிழக்கு ஐரோப்பாவுல இருக்குற ஒரு நாடு. 2022-ல ரஷ்யா இந்த நாட்டை ஆக்கிரமிக்க ஆரம்பிச்சது. இதுக்கு முக்கிய காரணம், உக்ரைன் நேட்டோன்னு சொல்லப்படுற சர்வதேச ராணுவ கூட்டமைப்புல இணைய முயற்சி செஞ்சது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, "நேட்டோவுல இணைஞ்சா போர் தொடுப்போம்"னு மிரட்டினார்.
ஆனா, ஜெலன்ஸ்கி பின்வாங்கல. இதனால 2022 பிப்ரவரில ரஷ்யா உக்ரைன் மேல போர் தொடுத்தது. மூணு வருஷத்துக்கும் மேல இந்தப் போர் நடந்துட்டு இருக்கு. இதுவரை 13,000-க்கும் மேல உக்ரைன் மக்கள், அதுல 700-க்கும் மேல குழந்தைகள் இறந்துட்டாங்கன்னு ஐ.நா. புள்ளிவிவரங்கள் சொல்லுது. ரஷ்யாவோட பாதிப்பு பத்தி எந்த தகவலும் வெளியே வரல.
இந்தப் போர்ல, உக்ரைனோட கிழக்கு பகுதிகளான டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவை ரஷ்யாவோட கட்டுப்பாட்டுக்கு போய்டுச்சு. இன்னும் சில பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றினாலும், உக்ரைன் பல இடங்களை மீட்டுடுச்சு. ஆனா, இந்தப் போர் இன்னும் முடியல.
இதையும் படிங்க: போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் ரஷ்யா!! இது சிக்கலான சூழ்நிலை என ஜெலன்ஸ்கி காட்டம்!!
இதுக்கு நடுவுல, அமெரிக்காவோட அலாஸ்காவுல ட்ரம்பும் புடினும் சந்திச்சு பேசினாங்க. இந்தக் கூட்டத்துல போர் நிறுத்தம் பத்தி ஒரு உடன்பாடு எட்டப்படலன்னாலும், "பெரிய முன்னேற்றம் இருக்கு"ன்னு ரெண்டு பேரும் சொன்னாங்க. ட்ரம்ப், "இனி போர் நிறுத்தம் ஜெலன்ஸ்கி கையில இருக்கு"னு சொல்லி, உக்ரைனை கைப்பற்றப்பட்ட கிரிமியாவை மீட்க முயற்சிக்கக் கூடாது, நேட்டோவுல இணையவும் கூடாதுன்னு கண்டிஷன் போட்டார். இதைப் பத்தி ஜெலன்ஸ்கியோட ஒன்றரை மணி நேரம் போன்ல பேசி, வாஷிங்டனுக்கு வரச் சொன்னார்.

இன்று வாஷிங்டன்ல ட்ரம்பை சந்திக்க ஜெலன்ஸ்கி போயிருக்கார். ஆனா, இந்த முறை அவர் தனியா போகல. ஐரோப்பிய யூனியன் தலைவர் உருசுலா வான் டேர், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிச் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ செயலாளர் மார்க் ரூட்டான்னு ஒரு பெரிய கூட்டணியே ஜெலன்ஸ்கிக்கு ஆதரவா வந்திருக்கு. இவங்க எல்லாம் ஏன்? காரணம், இந்த முறை ட்ரம்ப் ஜெலன்ஸ்கியை மிரட்டாம இருக்கணும்னு ஐரோப்பிய நாடுகள் விரும்புது.
கடந்த பிப்ரவரி 28-ல ட்ரம்பும் ஜெலன்ஸ்கியும் சந்திச்சப்போ, ட்ரம்ப் காரசாரமா பேசி, "நீங்க பேச்சு மேசைல பெரிய ஆளு இல்ல, ரஷ்யாவுக்கு முன்னாடி உங்களுக்கு வலு இல்ல"னு கடிந்துக்கிட்டார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், "ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு மரியாதை கொடுக்கல"னு குற்றம்சாட்டினார். இதனால ஜெலன்ஸ்கி கோபமாக பாதியிலேயே வெளியேறிட்டார். இந்த முறை அப்படி ஒரு மோதல் வரக் கூடாதுன்னு ஐரோப்பிய நாடுகள் உஷாரா இருக்காங்க.
இந்த சந்திப்புல, ரஷ்யா கைப்பற்றிய டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை விட்டுத்தர்றது, உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த பல லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவிக்கு பதிலா, உக்ரைனோட அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது பத்தி பேசப்படும்னு சொல்றாங்க.
ஆனா, ஜெலன்ஸ்கி இதுக்கு ஒத்துக்குவாரான்னு பெரிய கேள்வி. காரணம், உக்ரைன் தன்னோட இறையாண்மையையும், நிலங்களையும் விட்டுக்கொடுக்க தயாரா இல்ல. மேலும், நேட்டோ மாதிரி ஒரு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாம போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி ஒத்துக்க மாட்டார்னு சொல்றார்.
இந்த சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரு முக்கியமான திருப்பமா இருக்கலாம். ஆனா, ட்ரம்ப் சொல்ற மாதிரி உக்ரைன் தன்னோட நிலங்களை விட்டுக்கொடுக்க ஒத்துக்கலைன்னா, மறுபடியும் வார்த்தை மோதல் வர வாய்ப்பு இருக்கு. ஐரோப்பிய நாடுகள், "எந்த முடிவும் உக்ரைன் இருக்காம எடுக்கக் கூடாது"னு உறுதியா சொல்றாங்க.
இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்.. உங்களால தான் முடியும்!! புடினுக்கு லெட்டர் எழுதிய ட்ரம்ப் மனைவி!!